Thursday, December 30, 2010
Monday, December 13, 2010
சாதித்துக் காட்டினார் செய்னா: ஹாங்காங் தொடரில் சாம்பியன்
ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில், இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் சாம்பியன் பட்டம் வென்று சாதித்தார்.
ஹாங்காங்கில் உள்ள வான்சாய் நகரில், சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பைனலில் உலகின் "நம்பர்-4' வீராங்கனையான செய்னா, சீனாவின் ஷிஜியன் வாங்கை ("நம்பர்-5') எதிர்கொண்டார்.
முதல் செட்டை ஷிஜியன் வாங் 21-15 எனக் கைப்பற்றினார். பின்னர் எழுச்சி கண்ட செய்னா, 2வது செட்டை 21-16 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அபார ஆட்டத்தை தொடர்ந்த செய்னா, 21-17 என கைப்பற்றினார். சுமார் ஒரு மணி நேரம் 11 நிமிடம் நடந்த பைனலில், செய்னா 15-21, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் ஹாங்காங் சூப்பர் சீரிஸ் தொடரில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாறு படைத்தார். விரைவில் "நம்பர்-1' இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது செய்னா, நான்காவது சூப்பர் சீரிஸ் பட்டம் வென்றுள்ளார். இதற்கு முன் இந்தோனேஷியா (2009, 10), சிங்கப்பூர் (2010) சூப்பர் சீரிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இது, இந்த ஆண்டு இவர் கைப்பற்றிய மூன்றாவது சூப்பர் சீரிஸ் பட்டம். தவிர, இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ், டில்லி காமன்வெல்த் பாட்மின்டன் ஒற்றையர் போட்டிகளில் தங்கம் வென்று சாதித்ததன்மூலம், இந்த ஆண்டு 5 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
சர்வதேச பாட்மின்டன் ரேங்கிங்கில், இந்தியாவின் செய்னா நேவல் (59611.2637 புள்ளி) 4வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களில் சீனாவின் இகான் வாங் (65308.9106 புள்ளி), ஜின் வாங் (64772.4017 புள்ளி), டென்மார்க்கின் டினி பயுன் (60400.0982 புள்ளி) ஆகியோர் உள்ளனர். விரைவில் வெளியிடப்பட உள்ள ரேங்கிங்கில், ஹாங்காங் சூப்பர் சீரிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற செய்னாவுக்கு, 9200 புள்ளி வழங்கப்படும் பட்சத்தில் மொத்தம் 68811.2637 புள்ளிகள் பெறுவார். இத்தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய ஜின் வாங், 6420 புள்ளிகள் கூடுதலாக பெற்று 71192.4017 புள்ளிகள் பெறுவார். இதன்மூலம் செய்னா மீண்டும் "நம்பர்-2' இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. வரும் 14ம் தேதி ஐதராபாத்தில் துவங்கவுள்ள இந்திய கிராண்ட் பிரிக்ஸ் பாட்மின்டன் தொடரில் சாதிக்கும் பட்சத்தில், செய்னா "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறலாம்.
ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் 28 ஆண்டுகளுக்கு பின், இத்தொடரில் பட்டம் வென்ற இந்தியர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக கடந்த 1982ல் நடந்த இத்தொடரில், இந்திய வீரர் பிரகாஷ் படுகோனே ஒற்றையரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
ஹாங்காங்கில் உள்ள வான்சாய் நகரில், சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பைனலில் உலகின் "நம்பர்-4' வீராங்கனையான செய்னா, சீனாவின் ஷிஜியன் வாங்கை ("நம்பர்-5') எதிர்கொண்டார்.
முதல் செட்டை ஷிஜியன் வாங் 21-15 எனக் கைப்பற்றினார். பின்னர் எழுச்சி கண்ட செய்னா, 2வது செட்டை 21-16 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அபார ஆட்டத்தை தொடர்ந்த செய்னா, 21-17 என கைப்பற்றினார். சுமார் ஒரு மணி நேரம் 11 நிமிடம் நடந்த பைனலில், செய்னா 15-21, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் ஹாங்காங் சூப்பர் சீரிஸ் தொடரில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாறு படைத்தார். விரைவில் "நம்பர்-1' இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது செய்னா, நான்காவது சூப்பர் சீரிஸ் பட்டம் வென்றுள்ளார். இதற்கு முன் இந்தோனேஷியா (2009, 10), சிங்கப்பூர் (2010) சூப்பர் சீரிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இது, இந்த ஆண்டு இவர் கைப்பற்றிய மூன்றாவது சூப்பர் சீரிஸ் பட்டம். தவிர, இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ், டில்லி காமன்வெல்த் பாட்மின்டன் ஒற்றையர் போட்டிகளில் தங்கம் வென்று சாதித்ததன்மூலம், இந்த ஆண்டு 5 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
சர்வதேச பாட்மின்டன் ரேங்கிங்கில், இந்தியாவின் செய்னா நேவல் (59611.2637 புள்ளி) 4வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களில் சீனாவின் இகான் வாங் (65308.9106 புள்ளி), ஜின் வாங் (64772.4017 புள்ளி), டென்மார்க்கின் டினி பயுன் (60400.0982 புள்ளி) ஆகியோர் உள்ளனர். விரைவில் வெளியிடப்பட உள்ள ரேங்கிங்கில், ஹாங்காங் சூப்பர் சீரிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற செய்னாவுக்கு, 9200 புள்ளி வழங்கப்படும் பட்சத்தில் மொத்தம் 68811.2637 புள்ளிகள் பெறுவார். இத்தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய ஜின் வாங், 6420 புள்ளிகள் கூடுதலாக பெற்று 71192.4017 புள்ளிகள் பெறுவார். இதன்மூலம் செய்னா மீண்டும் "நம்பர்-2' இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. வரும் 14ம் தேதி ஐதராபாத்தில் துவங்கவுள்ள இந்திய கிராண்ட் பிரிக்ஸ் பாட்மின்டன் தொடரில் சாதிக்கும் பட்சத்தில், செய்னா "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறலாம்.
ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் 28 ஆண்டுகளுக்கு பின், இத்தொடரில் பட்டம் வென்ற இந்தியர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக கடந்த 1982ல் நடந்த இத்தொடரில், இந்திய வீரர் பிரகாஷ் படுகோனே ஒற்றையரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
Wednesday, December 8, 2010
இந்தியனின் இன்றைய நிலை
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடி மகனின் தலையிலும் நமது தாயகம் உலக வங்கியிடம் வாங்கிய கடனின் ஒரு குறிப்பிட்ட தொகை உள்ளது.
இவ்வாறு நாம் கையேந்தும் நிலையிலும் நமது தாய் திரு நாட்டில் நடந்துள்ள மிக பெரிய ஊழல் (உலக வரலாற்றில் இப்படி ஒரு சாதனை). ஒரு லட்சத்து எழுவதைந்து ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பு என்பது ஒரு உலக சாதனை.
நாட்டில் மக்கள் நடந்து செல்ல ஒரு உருப்படியான சாலை வசதி இல்லை, மூன்று வேலை உணவுக்கு நாம் கை ஏந்தும் அவல நிலை, எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாத ஒரு நாடாக நமது நாடு இருக்கிறது.
ஆனால் இவர்கள் அடுத்த மூன்று தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கும் ஆசையை மட்டும் கொஞ்சம் கூட குறைத்து கொள்ள மாட்டார்கள். இந்த மக்களும் அதை பற்றி எல்லாம் கவலை படாமல் அடுத்த தேர்தலில் யார் எவ்வளவு பணம் கொடுக்கின்றனர் என்றே பார்கின்றனர்.
நம்மை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது கூட வெறும் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குத்தான் சுரண்டிருப்பார்கள் ஆனால் இன்றைய அரசியல் வாதிகள் அதை எல்லாம் மிஞ்சி விட்டார்கள் என்பதே இந்தியர்க்கு கிடைத்த பெருமை.
இங்குதான் மனிதன் பிறக்கும் மருத்துவமனை முதல் கடைசி இடமான சுடுகாடு வரை ஊழல் நடந்து உள்ளது. இந்த அவல நிலை இந்த பிரபஜந்தில் வேறுஎங்கும் காண முடியாத ஒரு இமாலய சாதனை ஆகும்.
அவ்வாறு இவர்கள் சேர்க்கும் பணத்தையும் வெளி நாடுகளில் சென்று வங்கியில் போட்டு அந்த நாட்டின் பொருளாதார வளர்சிக்கு மறைமுகமாக பெரிதும் உதவுகிறார்கள் என்பது இந்த அரசியல் வாதிகளுக்கு தெரியுமோ தெரியாதோ.
இந்த விதத்தில் நாம் அனைவரும் ஏமாளி இந்தியன் என்ற முறையில் பெருமை பட்டு கொள்ள வேண்டிய நேரம் ஆகும்.
இவ்வாறு நாம் கையேந்தும் நிலையிலும் நமது தாய் திரு நாட்டில் நடந்துள்ள மிக பெரிய ஊழல் (உலக வரலாற்றில் இப்படி ஒரு சாதனை). ஒரு லட்சத்து எழுவதைந்து ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பு என்பது ஒரு உலக சாதனை.
நாட்டில் மக்கள் நடந்து செல்ல ஒரு உருப்படியான சாலை வசதி இல்லை, மூன்று வேலை உணவுக்கு நாம் கை ஏந்தும் அவல நிலை, எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாத ஒரு நாடாக நமது நாடு இருக்கிறது.
ஆனால் இவர்கள் அடுத்த மூன்று தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கும் ஆசையை மட்டும் கொஞ்சம் கூட குறைத்து கொள்ள மாட்டார்கள். இந்த மக்களும் அதை பற்றி எல்லாம் கவலை படாமல் அடுத்த தேர்தலில் யார் எவ்வளவு பணம் கொடுக்கின்றனர் என்றே பார்கின்றனர்.
நம்மை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது கூட வெறும் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குத்தான் சுரண்டிருப்பார்கள் ஆனால் இன்றைய அரசியல் வாதிகள் அதை எல்லாம் மிஞ்சி விட்டார்கள் என்பதே இந்தியர்க்கு கிடைத்த பெருமை.
இங்குதான் மனிதன் பிறக்கும் மருத்துவமனை முதல் கடைசி இடமான சுடுகாடு வரை ஊழல் நடந்து உள்ளது. இந்த அவல நிலை இந்த பிரபஜந்தில் வேறுஎங்கும் காண முடியாத ஒரு இமாலய சாதனை ஆகும்.
அவ்வாறு இவர்கள் சேர்க்கும் பணத்தையும் வெளி நாடுகளில் சென்று வங்கியில் போட்டு அந்த நாட்டின் பொருளாதார வளர்சிக்கு மறைமுகமாக பெரிதும் உதவுகிறார்கள் என்பது இந்த அரசியல் வாதிகளுக்கு தெரியுமோ தெரியாதோ.
இந்த விதத்தில் நாம் அனைவரும் ஏமாளி இந்தியன் என்ற முறையில் பெருமை பட்டு கொள்ள வேண்டிய நேரம் ஆகும்.
Monday, November 22, 2010
இந்த வார டவுண்லோட் - பயர்பாக்ஸ் பிரவுசரில் கால்குலேட்டர்
நமக்கு கால்குலேட்டர் எப்போதெல்லாம் தேவைப் படும் என்று முன்கூட்டியே கணக்கிட முடியாது. எப்போது வேண்டுமானாலும் தேவைப் படலாம். இன்டர்நெட்டில் உலா வருகையில், இது தேவைப்பட்டால், பிரவுசரை மூடி, பின்னர், புரோகிராம்ஸ் சென்று, கால்குலேட்டரை இயக்க நேரம் வீணாகிவிடும். இதற்கெனவே, பயர்பாக்ஸ் பிரவுசரில், அதன் டாஸ்க் பாரில் வைத்து இயக்கும் வகையில் ஒரு கால்குலேட்டர் தரப்பட்டுள்ளது. அதுவும் ஒரு சயின்டிபிக் கால்குலேட்டராக உள்ளது என்றால், அனைவருக்கும், குறிப்பாக மாணவர் களுக்கும், இளைஞர்களுக்கும் நன்மைதானே. இந்த பயர்பாக்ஸ் டாஸ்க்பார் சயின்டிபிக் கால்குலேட்டர் ஓர் ஆட் ஆன் தொகுப்பாக, புரோகிராமாகக் கிடைக்கிறது. இதனைப் பெற https://addons.mozilla.org/enUS/firefox/addon/6521/ என்ற முகவரிக்குச் செல்லவும். அடுத்து, அங்குள்ள “Add to Firefox” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
உடனே “Software Installation” டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் கிடைக்கும் “Install Now” பட்டனில் கிளிக் செய்திடவும். டாஸ்க் பார் சயின்டிபிக் கால்குலேட்டருக்கான புரோகிராம், உங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரில் பதியப்படும். அடுத்து “Restart Firefox” பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது கம்ப்யூட்டர் நீங்கள் மேற்கொள்ள இருப்பதைப் புரிந்து கொண்டு, விண்டோஸ், டேப்ஸ், பிரவுசர் ஆகிய அனைத்தையும் புதிய இணைப்பு களுடன் தொடங்கும். பிரவுசர் மீண்டும் கிடைத்தவுடன், கால்குலேட்டர் ஐகானில் கிளிக் செய்து, டெக்ஸ்ட் ஏரியாவில் நீங்கள் என்ன கணக்குகளைப் போட விரும்புகிறீர்களோ, அவற்றை என்டர் செய்திடவும். இந்த கால்குலேட்டர் ஐகானில் ரைட் கிளிக் செய்து, உங்கள் எண் அடிப்படையை மாற்றிக் கொள்ளலாம்.
உடனே “Software Installation” டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் கிடைக்கும் “Install Now” பட்டனில் கிளிக் செய்திடவும். டாஸ்க் பார் சயின்டிபிக் கால்குலேட்டருக்கான புரோகிராம், உங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரில் பதியப்படும். அடுத்து “Restart Firefox” பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது கம்ப்யூட்டர் நீங்கள் மேற்கொள்ள இருப்பதைப் புரிந்து கொண்டு, விண்டோஸ், டேப்ஸ், பிரவுசர் ஆகிய அனைத்தையும் புதிய இணைப்பு களுடன் தொடங்கும். பிரவுசர் மீண்டும் கிடைத்தவுடன், கால்குலேட்டர் ஐகானில் கிளிக் செய்து, டெக்ஸ்ட் ஏரியாவில் நீங்கள் என்ன கணக்குகளைப் போட விரும்புகிறீர்களோ, அவற்றை என்டர் செய்திடவும். இந்த கால்குலேட்டர் ஐகானில் ரைட் கிளிக் செய்து, உங்கள் எண் அடிப்படையை மாற்றிக் கொள்ளலாம்.
Wednesday, November 10, 2010
பள்ளிக்குழந்தைகளை கடத்திச் கொன்ற கொடூரன் சுட்டுக் கொலை
கோவையில் பள்ளிக்குழந்தைகளை கடத்திச்சென்று கொடூரமாக கொலை செய்த இருவரில் ஒருவன் "என்கவுன்டரில்' நேற்று சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்த செய்தி உன்மையில் அணைவருக்கும் ஒரு இனிப்பான செய்தி ஆகும். இந்த மாதிரியான கொடூரங்களுக்கு சரியான தண்டனை கொடுத்த காவல் துறைக்கு நமது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வோம்.
ஏனெனில் இந்த வழக்கு விசாரணையை சவ்வாக இழுக்காமல் உடனடியான தீர்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த செய்தி உன்மையில் அணைவருக்கும் ஒரு இனிப்பான செய்தி ஆகும். இந்த மாதிரியான கொடூரங்களுக்கு சரியான தண்டனை கொடுத்த காவல் துறைக்கு நமது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வோம்.
ஏனெனில் இந்த வழக்கு விசாரணையை சவ்வாக இழுக்காமல் உடனடியான தீர்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
Sunday, November 7, 2010
ரூ.44 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து : ஒபாமா அறிவிப்பு
மும்பை : ""அமெரிக்காவில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக, 44 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல ஒப்பந்தங்கள் இந்தியா - அமெரிக்கா இடையே கையெழுத்தாகியுள்ளன,'' என்று, அதிபர் பராக் ஒபாமா அறிவித்தார்.
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த அதிபர் ஒபாமா, நேற்று மாலை மும்பையில் நடந்த அமெரிக்க - இந்திய வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு 21ம் நூற்றாண்டில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும். அதில், எந்த சந்தேகமும் இல்லை. அதற்கேற்ற வகையில், வர்த்தக தடைகளை இந்தியா குறைக்க வேண்டும். அமெரிக்காவின் 12வது வர்த்தக பங்குதாரராக இந்தியா தற்போது உள்ளது. அமெரிக்காவின் முதன்மையான வர்த்தக பங்குதாரராக இந்தியா வர முடியாது எனச் சொல்ல முடியாது. அதற்கு எந்தக் காரணமும் இல்லை.நான் மும்பை வந்து சேருவதற்கு முன்னதாக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அமெரிக்காவின் போயிங் நிறுவனம், இந்தியாவுக்கு ஏராளமான விமானங்களை விற்க உள்ளது.
அதேபோல், நூற்றுக்கணக்கான எலக்ட்ரிக் இன்ஜின்களை விற்க ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இவை எல்லாம் 44 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள். இதன் மூலம் அமெரிக்காவில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.மேலும், ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்திடம் இருந்து 2,400 மெகாவாட் திறன் கொண்ட மின் சாதனங்களை வாங்க ரிலையன்ஸ் பவர் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா - அமெரிக்கா இடையே ஆரோக்கியமான போட்டிகள் உருவாகும். இருநாடுகளும் பலன் அடையும் வகையிலான பலமான வர்த்தக உறவுகள் உருவாக வாய்ப்பு ஏற்படும். இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகமும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.
இந்தியாவில் முதலீடு செய்ய அமெரிக்கா விரும்புகிறது. இதன்மூலம் இருநாடுகளும் வெற்றி பெற்ற நிலையை அடைய வேண்டும். அவுட்சோர்சிங் முறையில் இந்தியாவில் அமைக்கப்படும் அலுவலகங்களால், அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் பறிபோகின்றன. வர்த்தகத்தில் ஒரு வழிப்போக்குவரத்தை நாங்கள் விரும்பவில்லை. வேலைவாய்ப்புகள் மற்றும் மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அளிப்பதில், இருவழிப்பாதையை பின்பற்ற வேண்டும். அத்துடன் பாதுகாப்பு காரணங்கள் என்ற பெயரில், உயர் தொழில்நுட்ப துறைகளில் தடைகள் ஏற்படவும் அனுமதிக்கக் கூடாது.இந்தியா பெறும் நேரடி அன்னிய முதலீட்டில் 8 சதவீதம் அமெரிக்காவில் இருந்து வருகிறது. விவசாயப் புரட்சி காலங்களில் இந்தியா வளர்ச்சி அடைய அமெரிக்கர்கள் உதவினர். இன்று உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று இந்தியா. மத்திய தர மக்களை பெருமளவில் கொண்டுள்ள நாடும் இதுவே.இவ்வாறு அதிபர் ஒபாமா பேசினார்.
இந்த திட்டங்கள் அணைத்தும் வெறும் பேச்சளவில் நின்று விடாமல் செயலிலும் இருந்தால் நமது இந்தியா உலக அளவில் பெரிய முன்னேற்றம் அடையும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த அதிபர் ஒபாமா, நேற்று மாலை மும்பையில் நடந்த அமெரிக்க - இந்திய வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு 21ம் நூற்றாண்டில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும். அதில், எந்த சந்தேகமும் இல்லை. அதற்கேற்ற வகையில், வர்த்தக தடைகளை இந்தியா குறைக்க வேண்டும். அமெரிக்காவின் 12வது வர்த்தக பங்குதாரராக இந்தியா தற்போது உள்ளது. அமெரிக்காவின் முதன்மையான வர்த்தக பங்குதாரராக இந்தியா வர முடியாது எனச் சொல்ல முடியாது. அதற்கு எந்தக் காரணமும் இல்லை.நான் மும்பை வந்து சேருவதற்கு முன்னதாக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அமெரிக்காவின் போயிங் நிறுவனம், இந்தியாவுக்கு ஏராளமான விமானங்களை விற்க உள்ளது.
அதேபோல், நூற்றுக்கணக்கான எலக்ட்ரிக் இன்ஜின்களை விற்க ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இவை எல்லாம் 44 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள். இதன் மூலம் அமெரிக்காவில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.மேலும், ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்திடம் இருந்து 2,400 மெகாவாட் திறன் கொண்ட மின் சாதனங்களை வாங்க ரிலையன்ஸ் பவர் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா - அமெரிக்கா இடையே ஆரோக்கியமான போட்டிகள் உருவாகும். இருநாடுகளும் பலன் அடையும் வகையிலான பலமான வர்த்தக உறவுகள் உருவாக வாய்ப்பு ஏற்படும். இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகமும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.
இந்தியாவில் முதலீடு செய்ய அமெரிக்கா விரும்புகிறது. இதன்மூலம் இருநாடுகளும் வெற்றி பெற்ற நிலையை அடைய வேண்டும். அவுட்சோர்சிங் முறையில் இந்தியாவில் அமைக்கப்படும் அலுவலகங்களால், அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் பறிபோகின்றன. வர்த்தகத்தில் ஒரு வழிப்போக்குவரத்தை நாங்கள் விரும்பவில்லை. வேலைவாய்ப்புகள் மற்றும் மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அளிப்பதில், இருவழிப்பாதையை பின்பற்ற வேண்டும். அத்துடன் பாதுகாப்பு காரணங்கள் என்ற பெயரில், உயர் தொழில்நுட்ப துறைகளில் தடைகள் ஏற்படவும் அனுமதிக்கக் கூடாது.இந்தியா பெறும் நேரடி அன்னிய முதலீட்டில் 8 சதவீதம் அமெரிக்காவில் இருந்து வருகிறது. விவசாயப் புரட்சி காலங்களில் இந்தியா வளர்ச்சி அடைய அமெரிக்கர்கள் உதவினர். இன்று உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று இந்தியா. மத்திய தர மக்களை பெருமளவில் கொண்டுள்ள நாடும் இதுவே.இவ்வாறு அதிபர் ஒபாமா பேசினார்.
இந்த திட்டங்கள் அணைத்தும் வெறும் பேச்சளவில் நின்று விடாமல் செயலிலும் இருந்தால் நமது இந்தியா உலக அளவில் பெரிய முன்னேற்றம் அடையும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.
Wednesday, October 27, 2010
2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்
திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.
இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.
பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை
அப்படி என்ன செய்து விட்டார்?அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.
தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.
நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.
ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்
http://www.akshayatrust.org/ contact.php
Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India
Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in
மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்
http://heroes.cnn.com/vote. aspx
இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.
பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை
அப்படி என்ன செய்து விட்டார்?அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.
தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.
நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.
ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்
http://www.akshayatrust.org/
Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India
Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in
மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்
http://heroes.cnn.com/vote.
Tuesday, October 26, 2010
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் எல்லா நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும்
பல்வேறு நலவாரிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்களின் குடும்பங்கள் இத்திட்டத்தில் பயனாளிகளாக உள்ளனர். இவர்களுக்கு, ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகையாக தரப்படுகிறது.குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் ஸ்டார் காப்பீட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் பயனாளிகள் சிகிச்சை பெறலாம். இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை, கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் கருப்பை ஆகிய உறுப்புகளில் ஏற்படும், பட்டியலிடப்பட 51 வகை நோய்களுக்கு மட்டும் இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என, புதிது புதிதாக நோய்கள் ஏற்படும் இன்றைய சூழலில், குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுவதால், இத்திட்டத்தின் கீழ் வராத நோய்களால் பாதிக்கப்படுவோரின் நிலை பரிதாபமாக உள்ளது.கூடுதல் கவனிப்பு, நவீன சிகிச்சை போன்ற காரணங்களால், இத்திட்ட பயனாளிகள் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெற விரும்புகின்றனர். அவர்களில் பெரும்பாலோருக்கு, அரசு நிர்ணயித்துள்ள ஒரு லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை போதுமானதாக இல்லை.
சாமானியர்களுக்கும் தரமான மருத்துவம் வழங்குவது அரசின் கடமை. இதற்கு தமிழக அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் வழி வகுத்துள்ளது. இத்திட்டம் முழு வெற்றி பெற, காப்பீட்டு தொகைக்கான உச்சவரம்பை நீக்கவும், அனைத்து வகை நோய்களுக்கும் இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயனாளிகளின் எதிர்பார்ப்பு. இல்லையெனில் இத்திட்டத்தால், ஏழைகளைவிட, தனியார் மருத்துவமனைகளும், காப்பீட்டு நிறுவனமும் தான் அதிகம் பயன் பெறும்.
சிகிச்சைக்கான தொகையை பயனாளிகளுக்கு வழங்குவதில், ஸ்டார் காப்பீட்டு நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்கு இடையே வேறுபாடு உள்ளது. இதனால், ஒரு குறிப்பிட்ட நோய்க்கு, சில தனியார் மருத்துவமனைகளில் கிகிச்சைக்கான முழு தொகையும், சில மருத்துவமனைகளில் குறிப்பிட்ட அளவு தொகையும் பயனாளிக்கு தரப்படுகிறது. இக்குறையை களைய, காப்பீட்டு நிறுவன அதிகாரிகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் முறையாக செயல்படுத்தப்படுவதை, அரசு உறுதி செய்ய வேண்டும்.
பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என, புதிது புதிதாக நோய்கள் ஏற்படும் இன்றைய சூழலில், குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுவதால், இத்திட்டத்தின் கீழ் வராத நோய்களால் பாதிக்கப்படுவோரின் நிலை பரிதாபமாக உள்ளது.கூடுதல் கவனிப்பு, நவீன சிகிச்சை போன்ற காரணங்களால், இத்திட்ட பயனாளிகள் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெற விரும்புகின்றனர். அவர்களில் பெரும்பாலோருக்கு, அரசு நிர்ணயித்துள்ள ஒரு லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை போதுமானதாக இல்லை.
சாமானியர்களுக்கும் தரமான மருத்துவம் வழங்குவது அரசின் கடமை. இதற்கு தமிழக அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் வழி வகுத்துள்ளது. இத்திட்டம் முழு வெற்றி பெற, காப்பீட்டு தொகைக்கான உச்சவரம்பை நீக்கவும், அனைத்து வகை நோய்களுக்கும் இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயனாளிகளின் எதிர்பார்ப்பு. இல்லையெனில் இத்திட்டத்தால், ஏழைகளைவிட, தனியார் மருத்துவமனைகளும், காப்பீட்டு நிறுவனமும் தான் அதிகம் பயன் பெறும்.
சிகிச்சைக்கான தொகையை பயனாளிகளுக்கு வழங்குவதில், ஸ்டார் காப்பீட்டு நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்கு இடையே வேறுபாடு உள்ளது. இதனால், ஒரு குறிப்பிட்ட நோய்க்கு, சில தனியார் மருத்துவமனைகளில் கிகிச்சைக்கான முழு தொகையும், சில மருத்துவமனைகளில் குறிப்பிட்ட அளவு தொகையும் பயனாளிக்கு தரப்படுகிறது. இக்குறையை களைய, காப்பீட்டு நிறுவன அதிகாரிகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் முறையாக செயல்படுத்தப்படுவதை, அரசு உறுதி செய்ய வேண்டும்.
Wednesday, October 13, 2010
கண்பார்வையற்றவரின் சாதனை முயற்சி: கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்
திருநெல்வேலி : கண்பார்வையற்றவர் கணிதம் மற்றும் புள்ளியியலில் டாக்டர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் "கணிதவியல் மற்றும் புள்ளியல்' பாடத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு பிஎச்.டி.,டாக்டர் பெற்றவர் முழுவதும் கண்பார்வையற்ற சிவசக்திவேல். அனைவரது புருவங்களையும் உயர்த்தி அவர் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இணைப்பேராசிரியராக பணியாற்றுகிறார். வழக்கமாக பார்வையற்றவர்கள் வரலாறு, தமிழ் போன்ற கலைப்பாடங்களைத்தான் தேர்ந்தெடுத்து படிப்பார்கள்.
ஆனால் கணிதம் மற்றும் புள்ளியியலில் பி.எச்டி., டாக்டர் பட்டம் பெற்ற சிவசக்திவேல் இதுகுறித்து கூறுகையில், எனக்கு சொந்த ஊர் அருகில் உள்ள ஏழுசாட்டுப்பத்தாகும். நான் கன்னியாகுமரி, அந்தோணியார் பள்ளியில் பயிலும் வரையிலும் கண்பார்வை நன்றாக இருந்தது. இருப்பினும் வகுப்பு நடக்கும்போது ஆசிரியர் எழுதிபோட்டதை கரும்பலகைக்கு அருகில் வந்து பார்த்து எழுதிவிட்டு செல்லும் நிலையில் இருந்தேன். நான் பணிபுரியும் விவேகானந்தா கல்லூரியில்தான் பி.ஏஸ்.சி.,பயின்றேன். திருச்செந்தூர் கல்லூரியில் எம்.எஸ்.சி.,யும், மதுரையில் எம்.பில் பயின்றேன். விவேகானந்தா கல்லூரியில் துணைப்பேராசிரியராக 1983ல் பணிக்கு சேர்ந்தேன். அப்போது பார்வை இருந்தது. பணியில் சேர்ந்த பிறகு முழுமையாக பிறகு அரைகுறையாக இருந்த பார்வை முழுவதுமாக பறிபோனது. இதனால் நான் நிறைய சிரமங்களை சந்தித்தேன்.
பார்வையற்றவர் வகுப்பு நடத்த முடியாது என மாணவர்கள் எழுதியதுபோலசிலர் புகார் மனுக்கள் போட்டனர். எனக்கு கண் பார்வை பறிபோனது போல வேலையும் பறிபோகும் நிலை ஏற்பட்டது.இருப்பினும் என் மீது மாணவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். 1995ல் கண்பார்வையற்றவர்களுக்கான பாதுகாப்பு சட்டம் வந்தது. அதன்படி எனக்கு பாதுகாப்பு கிடைத்தது. இத்தகைய காலகட்டங்கள் போராட்டம் மிகுந்தவை. பி.எச்.டி.,க்கு 2005ல் பதிவு செய்தேன். இடையில் பார்வை போனதால் வழக்கமான பார்வையற்றோர்கள் பின்பற்றும் பிரெய்லி முறையை நான் கற்றுக்கொள்ளவில்லை. எனவேயாராவது நண்பர்கள் பாடத்தை சொல்லச்சொல்ல நன்றாக கேட்டுக்கொண்டு எழுதி பழகினேன்.
வகுப்பில் மாணவர்கள் சேட்டை செய்வார்கள் என்பதெல்லாம் இல்லை. நான் பாடம் நடத்தும்போது மாணவர்கள் நன்றாக கேட்டுக்கொள்கிறார்கள். எனக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். எனது மனைவி தங்கம், அரசு பள்ளியில் கணித ஆசிரியர் என்பதால் எனது படிப்பிற்கும் கல்லூரி பணிக்கும் உதவினார்,. மூத்த மகன் சிவசங்கர், பி.இ.,முடித்துவிட்டு பணியில் உள்ளார். இளையமகன் சிவரஞ்சன் காரியாப்பட்டி சேது பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆணுஞூடு பயில்கிறார். இப்போதும் எனக்கு உயர்கல்வி பயில உதவி புரிவது என்னிடம் முன்பு பயின்ற பழைய மாணாக்கர்கள்தான். அவர்களில் சிலர்தான்எனக்கு பயிலவும், வகுப்பு நடத்துவதற்காக குறிப்புகள் தரவும், விடைத்தாள் திருத்தவும் உதவுகிறார்கள் என்றார்.
இவரை போன்ற தன்னம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த உலகம் என்றும் கடமை பட்டுள்ளது.
ஆனால் கணிதம் மற்றும் புள்ளியியலில் பி.எச்டி., டாக்டர் பட்டம் பெற்ற சிவசக்திவேல் இதுகுறித்து கூறுகையில், எனக்கு சொந்த ஊர் அருகில் உள்ள ஏழுசாட்டுப்பத்தாகும். நான் கன்னியாகுமரி, அந்தோணியார் பள்ளியில் பயிலும் வரையிலும் கண்பார்வை நன்றாக இருந்தது. இருப்பினும் வகுப்பு நடக்கும்போது ஆசிரியர் எழுதிபோட்டதை கரும்பலகைக்கு அருகில் வந்து பார்த்து எழுதிவிட்டு செல்லும் நிலையில் இருந்தேன். நான் பணிபுரியும் விவேகானந்தா கல்லூரியில்தான் பி.ஏஸ்.சி.,பயின்றேன். திருச்செந்தூர் கல்லூரியில் எம்.எஸ்.சி.,யும், மதுரையில் எம்.பில் பயின்றேன். விவேகானந்தா கல்லூரியில் துணைப்பேராசிரியராக 1983ல் பணிக்கு சேர்ந்தேன். அப்போது பார்வை இருந்தது. பணியில் சேர்ந்த பிறகு முழுமையாக பிறகு அரைகுறையாக இருந்த பார்வை முழுவதுமாக பறிபோனது. இதனால் நான் நிறைய சிரமங்களை சந்தித்தேன்.
பார்வையற்றவர் வகுப்பு நடத்த முடியாது என மாணவர்கள் எழுதியதுபோலசிலர் புகார் மனுக்கள் போட்டனர். எனக்கு கண் பார்வை பறிபோனது போல வேலையும் பறிபோகும் நிலை ஏற்பட்டது.இருப்பினும் என் மீது மாணவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். 1995ல் கண்பார்வையற்றவர்களுக்கான பாதுகாப்பு சட்டம் வந்தது. அதன்படி எனக்கு பாதுகாப்பு கிடைத்தது. இத்தகைய காலகட்டங்கள் போராட்டம் மிகுந்தவை. பி.எச்.டி.,க்கு 2005ல் பதிவு செய்தேன். இடையில் பார்வை போனதால் வழக்கமான பார்வையற்றோர்கள் பின்பற்றும் பிரெய்லி முறையை நான் கற்றுக்கொள்ளவில்லை. எனவேயாராவது நண்பர்கள் பாடத்தை சொல்லச்சொல்ல நன்றாக கேட்டுக்கொண்டு எழுதி பழகினேன்.
வகுப்பில் மாணவர்கள் சேட்டை செய்வார்கள் என்பதெல்லாம் இல்லை. நான் பாடம் நடத்தும்போது மாணவர்கள் நன்றாக கேட்டுக்கொள்கிறார்கள். எனக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். எனது மனைவி தங்கம், அரசு பள்ளியில் கணித ஆசிரியர் என்பதால் எனது படிப்பிற்கும் கல்லூரி பணிக்கும் உதவினார்,. மூத்த மகன் சிவசங்கர், பி.இ.,முடித்துவிட்டு பணியில் உள்ளார். இளையமகன் சிவரஞ்சன் காரியாப்பட்டி சேது பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆணுஞூடு பயில்கிறார். இப்போதும் எனக்கு உயர்கல்வி பயில உதவி புரிவது என்னிடம் முன்பு பயின்ற பழைய மாணாக்கர்கள்தான். அவர்களில் சிலர்தான்எனக்கு பயிலவும், வகுப்பு நடத்துவதற்காக குறிப்புகள் தரவும், விடைத்தாள் திருத்தவும் உதவுகிறார்கள் என்றார்.
இவரை போன்ற தன்னம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த உலகம் என்றும் கடமை பட்டுள்ளது.
Monday, October 4, 2010
மருத்துவ புரட்சி படைத்த ராபர்ட்டுக்கு நோபல் பரிசு
மருத்துவ உலகில் புரட்சி ஏற்படுத்திய பிரிட்டனை சேர்ந்த ராபர்ட் எட்வர்டுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் ( உடற் கூற் இயல் ) இவர் ஆற்றிய பணிக்காக பாராட்டி இந்த பரிசு அளிக்கப்படுகிறது.
இன்று நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ராபர்ட் எட்வர்டு பிரிட்டனை சேர்ந்தவர். 85 வயது ஆகும் இவர் மருத்துவ துறைக்கு அரும்பணியாற்றி இருக்கிறார் என நோபல் பரிசு அறிவிக்கும் சுவீடன் தெரிவித்துள்ளது. மேலும் இவர் உலகில் வறட்டுத்தன்மைக்கு ( மலடு) இல்லாத நிலைக்கு இவரது கண்டுபிடிப்பு பெரிதும் உதவியிருக்கிறது என கூறப்பட்டுள்ளது.1978 ஆம் ஆண்டு தான் இவர் முதன் முதலில் டெஸ்ட் டியுப் குழந்த்தையை உருவாக்கினார்.
டெஸ்ட் டியூப் பேபி மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில் உலகில் 10 க்கும் மேற்பட்ட சதவீத்தனர் இதனை நம்பித்தான் இருக்கின்றனர். என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு அறிவிக்கப்படும் போது எப்போதும் மருத்துவ துறைக்குத்தான் முதலில் அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களில் தொடர்ந்து அமைதி, இலக்கியம் என நோபல் பரிசு வழங்கப்படும். இந்த நோபல் பரிசு கடந்த 1901 ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ரவீந்தரநாத் தாகூர் , அன்னைதெரசா, சர்.சி.வி.,ராமன், இந்தியாவில் பிறந்து அமெரிக்கராக வாழும் வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முக்கியஸ்தர்கள்.
இன்று நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ராபர்ட் எட்வர்டு பிரிட்டனை சேர்ந்தவர். 85 வயது ஆகும் இவர் மருத்துவ துறைக்கு அரும்பணியாற்றி இருக்கிறார் என நோபல் பரிசு அறிவிக்கும் சுவீடன் தெரிவித்துள்ளது. மேலும் இவர் உலகில் வறட்டுத்தன்மைக்கு ( மலடு) இல்லாத நிலைக்கு இவரது கண்டுபிடிப்பு பெரிதும் உதவியிருக்கிறது என கூறப்பட்டுள்ளது.1978 ஆம் ஆண்டு தான் இவர் முதன் முதலில் டெஸ்ட் டியுப் குழந்த்தையை உருவாக்கினார்.
டெஸ்ட் டியூப் பேபி மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில் உலகில் 10 க்கும் மேற்பட்ட சதவீத்தனர் இதனை நம்பித்தான் இருக்கின்றனர். என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு அறிவிக்கப்படும் போது எப்போதும் மருத்துவ துறைக்குத்தான் முதலில் அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களில் தொடர்ந்து அமைதி, இலக்கியம் என நோபல் பரிசு வழங்கப்படும். இந்த நோபல் பரிசு கடந்த 1901 ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ரவீந்தரநாத் தாகூர் , அன்னைதெரசா, சர்.சி.வி.,ராமன், இந்தியாவில் பிறந்து அமெரிக்கராக வாழும் வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முக்கியஸ்தர்கள்.
Sunday, September 26, 2010
உலக இதய நாள்
இன்று உலக இதயநாள் (26-09-10)
இன்று உலகம் முலுவதும் இதயநாள் கொண்டாடப்படுகிறது. நமது உடலில் ஒரு நொடி கூட ஓய்வு இல்லாமல் உழைக்கும் எந்திரம் இதயம் ஆகும். நாம் தூங்கினாலும் தூங்காவிட்டாலும் இதயத்தின் வேலை நடந்து கொண்டேயிருக்கும்.
இப்படிப்பட்ட இதயத்திற்கு இதமான சுகம் கொடுக்காமல் புகை, மது , டென்ஷன் போன்றவற்றால் நமது ரத்த அழுத்தத்தை அதிகரித்து நாமே நமக்கு கெடுதலாக இருக்கலாமா போன்றவற்றை அலசி உலக இதய நாளான இன்று இந்த சிறப்பு கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.
இந்தியர்களுக்கே அதிகம்
மாரடைப்பு உண்டாகிறது என்ற புள்ளிவிபரம் நமக்கு அச்சுறுத்துதலை ஏற்படுத்துகிறது. உடல் ஆரோக்கியத்தில் முதன்மையானது இருதய ஆரோக்கியம். மற்ற வியாதிகளைப் போலின்றி, இருதய வியாதிகளை தடுக்க முடியும் என்பது அசைக்க முடியாத உண்மை. வருமுன் காப்போம் என்பது, எந்த நோய்க்கு பொருந்துகிறதோ, இல்லையோ, இருதய நோய்க்கு மிகவும் பொருந்தும். இருதய நோயை தடுக்க மதுரை டாக்டர் சி.விவேக்போஸ் கூறும் சில எளிய வழிமுறைகள்:
ஆரோக்கியமான உணவு: உணவில் காய்கறிகள், பழங்கள் நிறைய சேர்க்க வேண்டும்.
எண்ணெய் பலகாரங்களை அறவே தவிர்க்க வேண்டும். உப்பு, சர்க்கரையை நன்கு குறைப்பது முக்கியம். அரிசி வகை உணவையும், நொறுக்குத் தீனியையும் தவிர்க்க வேண்டும்.
* சுறுசுறுப்பாக இயங்குதல்: தினமும் அரை மணி நேரம் சுறுசுறுப்பாக நடைப்பயிற்சி அல்லது ஏதாவது உடற்பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.
* பீடி, சிகரெட் புகைப்பது, குட்கா உள்ளிட்ட புகையிலையை சுவைப்பதை முற்றிலும் தவிர்த்தாக வேண்டும்.
ஆரோக்கிய எடை:
உடல் எடையை சரியான அளவில் வைத்திருப்பது முக்கியம். இதற்கு "உயரம் (செ.மீ.,ல்) - 100 = சரியான எடை (கிலோ கிராமில்). அதாவது ஒருவரது உயரம் 175 செ.மீ., இருந்தால், அவரது சரியான எடை (100ஐ கழித்து) 75 கிலோ இருக்க வேண்டும்.
எண்ணை தெரிந்து கொள்வது: ஒருவரது ரத்த அழுத்தம் 120 / 80 என்ற அளவில் இருக்க வேண்டும்.கொழுப்பு சத்தை பொறுத்தவரை எல்.டி.எல்., என்னும் கெட்ட கொழுப்பின் அளவு 100 மி.கி.,க்குள் இருந்தாக வேண்டும்.சர்க்கரை அளவானது வெறும் வயிற்றில் 100 மி.கி.,க்குள்ளும், சாப்பிட்ட 2 மணி நேரத்தில் 140 மி.கி.,க்குள்ளும் இருப்பது அவசியம்.
மன நிம்மதி: மனதை நாம் எப்போதும் நிம்மதியாக வைத்திருப்பது முக்கியம். குறிப்பாக யோகா, தியானம் இதற்கு பெரிதும் உதவுகிறது.இந்த 2010ம் ஆண்டில், "ஙிணிணூடு கடூச்ஞிஞு ஙிஞுடூடூணஞுண்ண்' என்பதே குறிக்கோள். அதாவது பணியாற்றும் இடம் ஆரோக்கிய சூழலில் இருக்க வேண்டும் என்பதே அது.
* நீங்கள் பணியாற்றும் இடத்தில் நீங்களும், உடன் பணியாற்றுவோரும் புகைப்பதோ, புகையிலையை உபயோகிப்பதோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* வேலை பார்க்கும் இடத்திலேயே உடற்பயிற்சி மேற்கொள்ளுதல். அதாவது நடந்தோ, சைக்கிளிலோ அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். மேலும் வேலை பார்க்கும் இடத்தில் "லிப்டை' உபயோகிக்காமல், படிகளில் நடந்தே ஏறிச் செல் வது போன்றவை நல்லது.
* நீங்கள் மட்டுமின்றி, சகஊழியருக்கும் எது நல்ல ஆரோக்கிய உணவு என சொல்லி கொடுத்து அதை கடைபிடிக்கச் செய்ய வேண்டும்.
* பணியாற்றும் இடத்தில் மனஅழுத்தம் இன்றி பார்த்துக் கொள்ள வேண்டும்.
நன்றி
மீ. குமார்.
இன்று உலகம் முலுவதும் இதயநாள் கொண்டாடப்படுகிறது. நமது உடலில் ஒரு நொடி கூட ஓய்வு இல்லாமல் உழைக்கும் எந்திரம் இதயம் ஆகும். நாம் தூங்கினாலும் தூங்காவிட்டாலும் இதயத்தின் வேலை நடந்து கொண்டேயிருக்கும்.
இப்படிப்பட்ட இதயத்திற்கு இதமான சுகம் கொடுக்காமல் புகை, மது , டென்ஷன் போன்றவற்றால் நமது ரத்த அழுத்தத்தை அதிகரித்து நாமே நமக்கு கெடுதலாக இருக்கலாமா போன்றவற்றை அலசி உலக இதய நாளான இன்று இந்த சிறப்பு கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.
இந்தியர்களுக்கே அதிகம்
மாரடைப்பு உண்டாகிறது என்ற புள்ளிவிபரம் நமக்கு அச்சுறுத்துதலை ஏற்படுத்துகிறது. உடல் ஆரோக்கியத்தில் முதன்மையானது இருதய ஆரோக்கியம். மற்ற வியாதிகளைப் போலின்றி, இருதய வியாதிகளை தடுக்க முடியும் என்பது அசைக்க முடியாத உண்மை. வருமுன் காப்போம் என்பது, எந்த நோய்க்கு பொருந்துகிறதோ, இல்லையோ, இருதய நோய்க்கு மிகவும் பொருந்தும். இருதய நோயை தடுக்க மதுரை டாக்டர் சி.விவேக்போஸ் கூறும் சில எளிய வழிமுறைகள்:
ஆரோக்கியமான உணவு: உணவில் காய்கறிகள், பழங்கள் நிறைய சேர்க்க வேண்டும்.
எண்ணெய் பலகாரங்களை அறவே தவிர்க்க வேண்டும். உப்பு, சர்க்கரையை நன்கு குறைப்பது முக்கியம். அரிசி வகை உணவையும், நொறுக்குத் தீனியையும் தவிர்க்க வேண்டும்.
* சுறுசுறுப்பாக இயங்குதல்: தினமும் அரை மணி நேரம் சுறுசுறுப்பாக நடைப்பயிற்சி அல்லது ஏதாவது உடற்பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.
* பீடி, சிகரெட் புகைப்பது, குட்கா உள்ளிட்ட புகையிலையை சுவைப்பதை முற்றிலும் தவிர்த்தாக வேண்டும்.
ஆரோக்கிய எடை:
உடல் எடையை சரியான அளவில் வைத்திருப்பது முக்கியம். இதற்கு "உயரம் (செ.மீ.,ல்) - 100 = சரியான எடை (கிலோ கிராமில்). அதாவது ஒருவரது உயரம் 175 செ.மீ., இருந்தால், அவரது சரியான எடை (100ஐ கழித்து) 75 கிலோ இருக்க வேண்டும்.
எண்ணை தெரிந்து கொள்வது: ஒருவரது ரத்த அழுத்தம் 120 / 80 என்ற அளவில் இருக்க வேண்டும்.கொழுப்பு சத்தை பொறுத்தவரை எல்.டி.எல்., என்னும் கெட்ட கொழுப்பின் அளவு 100 மி.கி.,க்குள் இருந்தாக வேண்டும்.சர்க்கரை அளவானது வெறும் வயிற்றில் 100 மி.கி.,க்குள்ளும், சாப்பிட்ட 2 மணி நேரத்தில் 140 மி.கி.,க்குள்ளும் இருப்பது அவசியம்.
மன நிம்மதி: மனதை நாம் எப்போதும் நிம்மதியாக வைத்திருப்பது முக்கியம். குறிப்பாக யோகா, தியானம் இதற்கு பெரிதும் உதவுகிறது.இந்த 2010ம் ஆண்டில், "ஙிணிணூடு கடூச்ஞிஞு ஙிஞுடூடூணஞுண்ண்' என்பதே குறிக்கோள். அதாவது பணியாற்றும் இடம் ஆரோக்கிய சூழலில் இருக்க வேண்டும் என்பதே அது.
* நீங்கள் பணியாற்றும் இடத்தில் நீங்களும், உடன் பணியாற்றுவோரும் புகைப்பதோ, புகையிலையை உபயோகிப்பதோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* வேலை பார்க்கும் இடத்திலேயே உடற்பயிற்சி மேற்கொள்ளுதல். அதாவது நடந்தோ, சைக்கிளிலோ அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். மேலும் வேலை பார்க்கும் இடத்தில் "லிப்டை' உபயோகிக்காமல், படிகளில் நடந்தே ஏறிச் செல் வது போன்றவை நல்லது.
* நீங்கள் மட்டுமின்றி, சகஊழியருக்கும் எது நல்ல ஆரோக்கிய உணவு என சொல்லி கொடுத்து அதை கடைபிடிக்கச் செய்ய வேண்டும்.
* பணியாற்றும் இடத்தில் மனஅழுத்தம் இன்றி பார்த்துக் கொள்ள வேண்டும்.
நன்றி
மீ. குமார்.
Friday, September 24, 2010
மரங்களை வெட்டுங்கள்
மரங்களை வெட்டுங்கள்
உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.
மண்ணின் வில்லன்
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )
ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.
இதன் கொடூரமான குணங்கள்
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.
உடம்பு முழுதும் விஷம்
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.
காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.
அறியாமை
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.
கேரளாவின் விழிப்புணர்வு
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.
நல்ல மரம் ஆரோக்கியம்
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .
சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவரமாக கொண்டுவரவேண்டும்.
Subscribe to:
Posts (Atom)