Showing posts with label show all. Show all posts
Showing posts with label show all. Show all posts

Friday, April 1, 2011

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!
ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..


குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க
விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.
இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு
என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..


இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம்
வெட்க்கப்படவேண்டியுள்ளது.


ஏனென்றால்,

குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.


இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...


குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய
உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.

(
ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)


ஆனால்... இன்று..


அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக
கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.


மீண்டும் உங்கள் நினைவிற்கு..


குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது



-
மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.

-
இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.

-
இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

-TATA,Hyundai,Ford,Reliance,Honda
இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.


இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை
தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)


நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம்
வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)


அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.


நம் மாநிலத்தின் நிலை??



அடுத்த 5 ஆண்டுகளில் இந்த அரசியல்வாதிகள்  நிஜ சிங்கப்பூரை விலைக்கு
வாங்ககூடும்.


இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண
தேர்தல் அல்ல..
மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.
இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.


இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும்
வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம்.
உலகம் நம்மை காரி உமிழும்.


நல்ல வரலாறு படைப்போம்.நன்றி!

Friday, January 14, 2011

இளம் பெண் கற்பழிப்பில் ஈடுபட்ட பகுஜன் எம்.எல்.ஏ.,வுக்கு சிறை

லக்னோ:உத்தர பிரதேசத்தில் தலித் பெண் ஷீலுவை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ., புரு÷ஷாத்தம் நரேஷ் துவிவேதி நேற்று கைது செய்யப்பட்டார்.உத்தர பிரதேச மாநிலம், நராயினி சட்டசபை தொகுதியில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் புரு÷ஷாத்தம் நரேஷ் துவிவேதி . இவர், தலித் வகுப்பைச் சேர்ந்த 17 வயது பெண் ஷீலுவை கற்பழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. அதேநேரத்தில், எம்.எல்.ஏ., கொடுத்த புகாரின் பேரில், கடந்த மாதம் அந்தப் பெண் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார்.

                                         பாண்டா மாவட்டத்தில் அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியதும், அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

                                          இந்த மாதிரியான வழக்குகளுக்கு வெறும் சிறை தண்டனை என்பது வெறும் கண் துடைப்பு. இவர்களுக்கெல்லாம் முஸ்லீம் நாடுகளில் கொடுக்கப்படும் கடுமையான தண்டணைகள் போல் இங்கும் கொடுத்தால் தான் நமது நாடு இந்த மாதிரியான காமூகங்கள் கையிலிருந்து விடுபடும்.