Wednesday, December 8, 2010

இந்தியனின் இன்றைய நிலை

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடி மகனின் தலையிலும் நமது தாயகம் உலக வங்கியிடம் வாங்கிய கடனின் ஒரு குறிப்பிட்ட தொகை உள்ளது.
                        இவ்வாறு நாம் கையேந்தும் நிலையிலும் நமது தாய் திரு நாட்டில் நடந்துள்ள மிக பெரிய ஊழல் (உலக வரலாற்றில் இப்படி ஒரு சாதனை). ஒரு லட்சத்து எழுவதைந்து  ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பு என்பது ஒரு உலக சாதனை.

                                   நாட்டில் மக்கள் நடந்து செல்ல ஒரு உருப்படியான சாலை வசதி இல்லை, மூன்று வேலை உணவுக்கு நாம் கை ஏந்தும் அவல நிலை, எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாத ஒரு நாடாக நமது நாடு இருக்கிறது.

                                  ஆனால் இவர்கள் அடுத்த மூன்று தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கும் ஆசையை மட்டும் கொஞ்சம் கூட குறைத்து கொள்ள மாட்டார்கள். இந்த மக்களும் அதை பற்றி எல்லாம் கவலை படாமல் அடுத்த தேர்தலில் யார் எவ்வளவு பணம் கொடுக்கின்றனர் என்றே பார்கின்றனர்.

                         நம்மை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது கூட வெறும் ஆயிரம் கோடி  ரூபாய் அளவுக்குத்தான் சுரண்டிருப்பார்கள் ஆனால் இன்றைய அரசியல் வாதிகள் அதை எல்லாம் மிஞ்சி விட்டார்கள் என்பதே இந்தியர்க்கு கிடைத்த பெருமை.
                                         இங்குதான் மனிதன் பிறக்கும் மருத்துவமனை முதல் கடைசி  இடமான சுடுகாடு வரை ஊழல் நடந்து உள்ளது. இந்த அவல நிலை இந்த பிரபஜந்தில் வேறுஎங்கும் காண முடியாத ஒரு இமாலய சாதனை ஆகும்.
                                         அவ்வாறு இவர்கள் சேர்க்கும் பணத்தையும் வெளி நாடுகளில் சென்று வங்கியில் போட்டு அந்த நாட்டின் பொருளாதார வளர்சிக்கு மறைமுகமாக பெரிதும் உதவுகிறார்கள் என்பது இந்த அரசியல் வாதிகளுக்கு தெரியுமோ தெரியாதோ.
                                           இந்த விதத்தில் நாம் அனைவரும் ஏமாளி இந்தியன் என்ற முறையில் பெருமை பட்டு கொள்ள வேண்டிய நேரம் ஆகும்.

No comments:

Post a Comment