Friday, June 24, 2011

துப்பாக்கி குண்டுகளை எதிர்கொள்ள தயார்: அன்னா ஹசாரே ஆவேசம்

""சாவை கண்டு நான் அஞ்சவில்லை. லோக்பால் மசோதாவுக்காக துப்பாக்கிக் குண்டுகளையும் எதிர்கொள்ளத் தயார்,'' என, அன்னா ஹசாரே கூறினார்.

போபாலில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி நான் உண்ணாவிரதம் இருக்கும் போது, துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தாலும், அதை நான் எதிர்கொள்வேன். சாவைக் கண்டு அஞ்ச மாட்டேன். அப்படி எங்களை நோக்கி அரசு தரப்பினர் சுட்டால், "இந்தியாவில் ஜனநாயக ஆட்சி நடக்கிறதா அல்லது சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா' என்பதை, நாட்டு மக்கள் முடிவு செய்வர். மகாத்மா காந்தி, காமராஜர் போன்ற தலைவர்கள் வழி நடத்திய, காங்கிரஸ் கட்சி தான் தற்போது உள்ளதா என்பது சந்தேகமாக உள்ளது. போராட்டம் நடத்துவது என்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக உரிமை. பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி நாங்கள் உண்ணாவிரதம் இருந்தால், அதை ஒடுக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது தெரிகிறது. ஊழலுக்கு எதிரான இந்த போராட்டத்தில் அன்னா ஹசாரே மட்டும் ஈடுபடவில்லை. ஒட்டு மொத்த நாட்டு மக்களும் இதற்கு ஆதரவு தருகின்றனர். எங்களின் போராட்டத்தை முடக்க நினைத்தால், மக்கள், அரசுக்கு சரியான பாடம் புகட்டுவர். இவ்வாறு ஹசாரே கூறினார்.

அதே நேரத்தில், லோக்பால் மசோதா தொடர்பாக, சமூக பிரதிநிதிகள் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது: அரசு உருவாக்க விரும்பும் லோக்பால் அமைப்பு, ஊழலை ஒழிக்காது. அதற்கு மாறாக, ஊழல் குறித்து புகார் கொடுப்பவர்களை அடக்கி விடும். லோக்பால் மசோதா தொடர்பாக அரசு தரப்பினர் தெரிவித்துள்ள பரிந்துரைகளில், பெரும்பாலான அரசு அதிகாரிகள், லோக்பால் விசாரணை வரம்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊழல் புரிந்தவர்களுக்கு சாதகமாகவும், அவர்கள் தப்பிக்கும் வகையிலும் சில விதிகள் இடம் பெற்றுள்ளன. கிராம அளவில் உள்ள சிறிய அரசு சார்பற்ற அமைப்புகளைக் கூட, லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரும் போது, பெரும்பாலான பொது ஊழியர்களை இந்த வரம்பில் இருந்து நீக்குவது எப்படி சரியாக இருக்கும்.

அரசு தரப்பினரின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால், விவசாயிகள், தொழிலாளர்கள், பழங்குடியினர் சங்கங்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் போன்றவற்றின் செயல்பாடுகள் எல்லாம் முடங்கி விடும். உதாரணமாக, குக்கிராமத்தில் உள்ள வாலிபர் சங்கத்தினர், ஊராட்சி பணிகளில் ஊழல் நடப்பதை கண்டுபிடித்தால், அவர்களின் செயல்பாடுகளை லோக்பால் மூலம் முடக்கி விட முடியும். அதற்கு மாறாக கிராம ஊராட்சித் தலைவர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் ஊழல் அதிகாரிகள் தப்பிக்க முடியும். அவர்கள் விசாரணை வரம்பிற்குள் வர மாட்டார்கள். இப்படிபட்ட நிலையில் தான், அரசு தரப்பினர் தயாரித்துள்ள வரைவு மசோதா உள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, April 1, 2011

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!
ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..


குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க
விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.
இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு
என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..


இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம்
வெட்க்கப்படவேண்டியுள்ளது.


ஏனென்றால்,

குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.


இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...


குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய
உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.

(
ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)


ஆனால்... இன்று..


அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக
கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.


மீண்டும் உங்கள் நினைவிற்கு..


குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது



-
மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.

-
இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.

-
இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

-TATA,Hyundai,Ford,Reliance,Honda
இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.


இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை
தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)


நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம்
வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)


அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.


நம் மாநிலத்தின் நிலை??



அடுத்த 5 ஆண்டுகளில் இந்த அரசியல்வாதிகள்  நிஜ சிங்கப்பூரை விலைக்கு
வாங்ககூடும்.


இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண
தேர்தல் அல்ல..
மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.
இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.


இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும்
வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம்.
உலகம் நம்மை காரி உமிழும்.


நல்ல வரலாறு படைப்போம்.நன்றி!

Monday, February 21, 2011

கிராம வளர்ச்சிக்காக பொறுப்பாக உழைக்கும் ஊராட்சித் தலைவர் ராஜு:

தன் கிராம வளர்ச்சிக்காக பொறுப்பாக உழைக்கும் ஊராட்சித் தலைவர் ராஜு: ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியத்தைச் சேர்ந்த களிமண்குண்டு கிராமத்தின் ஊராட்சித் தலைவராக உள்ளேன். இது, மீனவக் கிராமம், அனைவரும் மீன் பிடிக்க சென்று விடுவர். குடிநீர் குழாய் உடைப்பு, சாலை சீரமைத்தல் போன்ற பணிகளுக்கு ஆள் கிடைக்காது.பக்கத்து ஊரில் இருந்து ஆட்களை கூட்டி வந்தாலும், "யார் குறைந்த கூலிக்கு வரத் தயாரா உள்ளனரோ, அவர்களை வைத்து தான், முடிக்கணும்'னு அலுவலக விதி உள்ளது. "வேலை முடிஞ்சதும், காசோலையாகத் தான் கூலியைத் தரணும்'ன்னும் விதி உள்ளது. அந்தக் காசு அவர்களுக்கு கிடைக்க 20 நாட்களாகிவிடும், அதனால், யாரும் வருவதில்லை.அதனால், ஊர் வேலைகள் சிலவற்றை நானே செய்து விடுவேன்.நான் படித்தது ஆறாம் வகுப்பு என்றாலும், ஊராட்சி வேலைகள் அனைத்தும் மனப்பாடமாக தெரியும். ஆரம்பப் பள்ளி, மைதானம், குடிநீர்த் தொட்டிகள், தெருக்குழாய்கள், நூலகம் என, அனைத்தையும் புள்ளி விவரங்களுடன் என்னால் கூற முடியும்.ஊராட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின், என் தந்தை இறந்தபோது மட்டும் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்திருக்கிறேன்.என் கிராமத்தின் வேலைகளை பிரதமரோ, முதல்வரோ, மந்திரியோ நேரில் வந்து செய்ய முடியாது; அதனால்தான் என்னை தலைவரா தேர்ந்தெடுத்து, பொறுப்பைக் கொடுத்துள்ளனர். அதைக் கடைசி வரைக்கும் சரியா செய்ய வேண்டும் என்பது என் ஆசை. வெள்ளை வேட்டி, சட்டை போட்டு, காரில் பந்தாவா போனா மக்கள் தேவை பூர்த்தி அடையாது.


நன்றி
தினமலர்

Wednesday, February 2, 2011

சுற்றுச்சூழல் பாதிக்காத "ஏர்கூலர்' கண்டுபிடிப்பு:

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத, நவீன, "ஏர்கூலர்' உருவாக்கியதற்காக, மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி சத்யப்ரியாவுக்கு, தேசிய விருது கிடைத்துள்ளது.மதுரையில், பள்ளியளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில், சத்யப்ரியாவின் படைப்பு, பார்ப்போரை கவர்ந்தது. எனவே, மண்டல போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றார். அடுத்ததாக, டில்லியில் நடந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான தேசிய அறிவியல் கண்காட்சி போட்டியில் இவரது படைப்பு போற்றப்பட்டது. மொத்தம், 18 மாதிரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

                  இதிலிருந்து ஐந்து சிறந்த மாதிரிகள், ஜெய்ப்பூரில் நடந்த, 37வது ஜவகர்லால் நேரு தேசிய அறிவியல் கண்காட்சியில் (குழந்தைகளுக்கானது) இடம்பெற்றன. அதில், இவரது படைப்பும் இடம்பெற்றது; தேசிய விருதும் பெற்றார். சமீபத்தில் சென்னையில் நடந்த குழந்தைகள் அறிவியல் காங்கிரசிலும் பங்கேற்றார்.


சத்யப்ரியா கூறியதாவது:"ஏசி'யை பயன்படுத்துவதால் குளோரோ புளூரோ கார்பன்களின் அளவு அதிகரிக்கிறது. ஏர்கூலர் மூலம் ஓசோனில் மாற்றம் ஏற்படுகிறது. "ஏசி'க்கு மாற்றாக, அதே நேரம் ஏர்கூலரை புதிய விதமாக மாற்ற முயற்சித்தேன். களிமண் பானை, டியூப்கள், மின்விசிறி, தாமிர டியூப்கள் இவற்றின் மூலம் நவீன ஏர்கூலரை உருவாக்கினேன். வெட்டிவேர் மற்றும் நமக்குப் பிடித்தமான மூலிகைகளை ஏர்கூலரில் அடைத்தால், வெளியேறும் காற்று நறுமணமாக இருக்கும். 20 முதல் 30 டிகிரி வெப்பநிலையே இருப்பதால், உடலுக்கு இதமாக இருக்கும்.இந்த காற்றை சுவாசித்தால் ஆஸ்துமா, அலர்ஜி ஏற்படாது. குறைந்தபட்சம், 80 வாட்ஸ் மின்சாரம் போதும். 2,500 முதல் 3,500 ரூபாய்க்குள் செய்து விடலாம். சுற்றுச்சூழலுக்கு எந்தவிதத்திலும் தீங்கில்லாத இந்த ஏர்கூலருக்கு தேசிய விருது கிடைத்தது பெருமையாக உள்ளது.இவ்வாறு சத்யப்ரியா கூறினார். 

நன்றி
தினமலர்


Friday, January 14, 2011

இளம் பெண் கற்பழிப்பில் ஈடுபட்ட பகுஜன் எம்.எல்.ஏ.,வுக்கு சிறை

லக்னோ:உத்தர பிரதேசத்தில் தலித் பெண் ஷீலுவை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ., புரு÷ஷாத்தம் நரேஷ் துவிவேதி நேற்று கைது செய்யப்பட்டார்.உத்தர பிரதேச மாநிலம், நராயினி சட்டசபை தொகுதியில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் புரு÷ஷாத்தம் நரேஷ் துவிவேதி . இவர், தலித் வகுப்பைச் சேர்ந்த 17 வயது பெண் ஷீலுவை கற்பழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. அதேநேரத்தில், எம்.எல்.ஏ., கொடுத்த புகாரின் பேரில், கடந்த மாதம் அந்தப் பெண் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார்.

                                         பாண்டா மாவட்டத்தில் அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியதும், அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

                                          இந்த மாதிரியான வழக்குகளுக்கு வெறும் சிறை தண்டனை என்பது வெறும் கண் துடைப்பு. இவர்களுக்கெல்லாம் முஸ்லீம் நாடுகளில் கொடுக்கப்படும் கடுமையான தண்டணைகள் போல் இங்கும் கொடுத்தால் தான் நமது நாடு இந்த மாதிரியான காமூகங்கள் கையிலிருந்து விடுபடும்.

Wednesday, January 12, 2011

டூவீலரில் 3 ஜி கருவி மூலம் 80 சத விபத்துகளை குறைக்கலாம்: மாணவரின் அரிய கண்டுபிடிப்பு

விருதுநகரில் நடந்த, 37வது மாநில அளவிலான ஜவகர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்ற மானாமதுரை மாணவர் மணிகண்டனின் புதிய கண்டுபிடிப்பான "3 ஜி' வாகன கட்டுப்பாட்டு கருவியால், 80 சதவீத விபத்துகளை குறைக்க முடியும்.

                                              உலகில், ஆண்டுக்கு 12 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். டூவீலர்களால் 75 சதவீத விபத்துகள் அதிகரித்துள்ளன. இதை கட்டுப்படுத்தும் விதமாக, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஓ.வி.சி., மெட்ரிக் பள்ளி மாணவர் வி.ஆர். மணிகண்டன், ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்திலான கருவி மூலம், "3 ஜி' வாகன கட்டுப்பாட்டு கருவியை கண்டுபிடித்துள்ளார். ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் டூவீலரை பதிவு செய்யும் போது, அதில் இந்த டிவைஸ் பொருத்தலாம். இதன் விலை 2,200 ரூபாய். இதை பொருத்திய பின், இதற்காக தனி எண் தரப்படும்.வாகனம் திருடு போனால் அதற்குரிய எண்ணை, மொபைல் போன் மூலம் அழைத்தால் வாகனம் நின்று விடும். அதிலிருந்து எச்சரிக்கை ஒலி எழும்பும். வாகனம் இருக்கும் இடத்தை எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கும். மேலும், "ஹெல்மெட்' அணிந்த பின்பே வாகனத்தை இயக்க முடியும். வாகனம் விபத்துக்குள்ளாகும் போது, சம்பந்தப்பட்ட மொபைல் எண்ணிற்கு இந்த இடத்தில் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது என எஸ்.எம்.எஸ்., தரும்.சைடு ஸ்டாண்ட் போட்டிருக்கும் போது, டூவீலரை இயக்க முடியாது. குறிப்பிட்ட இடங்களில் இத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்பதை கண்டுபிடிக்கும். "பிரேக் ஷூ' தேய்ந்து விட்டால், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும்.

                                                     இரவு நேரங்களில் மட்டுமே முகப்பு விளக்குகள் எரியும். பகலில் "ஆன்' செய்தாலும் எரியாது. "எப்.சி.' எடுக்க வேண்டிய தேதியை, அறிவுறுத்தும். திருட்டு வாகனங்களோ, ரோடுகளில் தவறு செய்யும் வாகனங்கள் 200 மீட்டரில் வரும் போதே, நெடுஞ்சாலை கண்காணிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும். வாகன "பயோ டேட்டா' வழங்கும் விதமாக "3 ஜி' கட்டுப்பாட்டு கருவியை கண்டுபிடித்துள்ள மணிகண்டனுக்கு, விருதுநகரில் நடந்த மாநில அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு வழங்கப்பட்டது.
 நன்றி
தினமலர்.

                                 இது போன்ற கண்டுபிடிப்புகளால் நாட்டில் அன்றாடம் நிகழும் இரண்டு சக்கர வாகனங்களின் விபத்துக்களை பெரிய அளவில் குறைக்கலாம், இதற்கு அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                                                     

Wednesday, January 5, 2011

காமன்வெல்த் ஊழல்: சுரேஷ் கல்மாடியிடம் 8 மணிநேரம் சி.பி.ஐ.,விசாரணை

இந்த சி.பி.ஐ., விசாரணை என்பது வெறும் கண் துடைப்பு. இது வரை எந்த ஒரு வழக்கிற்கும் சி.பி.ஐ., மூலமாக எந்த ஒரு தீர்வும் காணப்படவில்லை என்பதே உண்மை அப்படி இருக்க இதற்கு மட்டும் தீர்வு கிடைக்கவாபோகிறது.
                              
இதை விட பெரிய ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. சுமார் 1,78,000 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது அதில் எந்த ஒரு நடவடிக்கையிலும் முன்னேற்றம் இல்லை அப்படி இருக்க இந்த காமன்வெல்த் ஊழலில் மட்டும் என்ன விடையா கிடைக்கபோகிறது.

 இந்த ஊழல்களில் தொடர்புடையவர்களை மக்களே நேரிடையாக தண்டிக்கும் காலம் வந்தால் மட்டுமே இந்த ஊழல்வாதிகள் மாறுவதற்கு வாய்ப்புள்ளது.

Tuesday, January 4, 2011

தேர்தல் ஆண்டு

மீண்டும்  அணைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.....

இந்த வருடம் தமிழகத்திற்க்கு சிறப்பான காலம் எனலாம், ஏனெனில் இந்த வருடம் தேர்தல் ஆண்டு (சட்டபேரவை தேர்தல்).

                                   மக்கள் தங்களுடைய பிரம்ம அஸ்திரத்தை(வாக்களிப்பது) பயன்படுத்த கூடிய ஒரு பொன்னான தருணம் ஆகும்.

                                 மக்களை இலவசம் என்ற பெயரில் சோம்பேறிகளாக மாற்றி வரும் இந்த நயவஞ்சக அரசியல்வாதிகளடம் இருந்து மாறி இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை செய்யகூடிய நல்லவர்களை தேர்ந்தெடுக்க கூடிய நல்ல காலம் ஆகும்.

                                     இதனை மக்கள் மட்டுமே சிந்தித்தால் தான் நடக்கும், அதை விட்டு விட்டு இலவசங்கள் மற்றும் வாக்குக்கு யார் பணம் தருவார் என்று பின்னாடி சென்றால்  அடுத்த ஐந்தாண்டில் நம் தமிழ் நாடு இந்திய வரைபடத்திலிருந்து காணாமல் போனாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.