மீண்டும் அணைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.....
இந்த வருடம் தமிழகத்திற்க்கு சிறப்பான காலம் எனலாம், ஏனெனில் இந்த வருடம் தேர்தல் ஆண்டு (சட்டபேரவை தேர்தல்).
மக்கள் தங்களுடைய பிரம்ம அஸ்திரத்தை(வாக்களிப்பது) பயன்படுத்த கூடிய ஒரு பொன்னான தருணம் ஆகும்.
மக்களை இலவசம் என்ற பெயரில் சோம்பேறிகளாக மாற்றி வரும் இந்த நயவஞ்சக அரசியல்வாதிகளடம் இருந்து மாறி இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை செய்யகூடிய நல்லவர்களை தேர்ந்தெடுக்க கூடிய நல்ல காலம் ஆகும்.
இதனை மக்கள் மட்டுமே சிந்தித்தால் தான் நடக்கும், அதை விட்டு விட்டு இலவசங்கள் மற்றும் வாக்குக்கு யார் பணம் தருவார் என்று பின்னாடி சென்றால் அடுத்த ஐந்தாண்டில் நம் தமிழ் நாடு இந்திய வரைபடத்திலிருந்து காணாமல் போனாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.
No comments:
Post a Comment