Friday, January 14, 2011

இளம் பெண் கற்பழிப்பில் ஈடுபட்ட பகுஜன் எம்.எல்.ஏ.,வுக்கு சிறை

லக்னோ:உத்தர பிரதேசத்தில் தலித் பெண் ஷீலுவை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ., புரு÷ஷாத்தம் நரேஷ் துவிவேதி நேற்று கைது செய்யப்பட்டார்.உத்தர பிரதேச மாநிலம், நராயினி சட்டசபை தொகுதியில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் புரு÷ஷாத்தம் நரேஷ் துவிவேதி . இவர், தலித் வகுப்பைச் சேர்ந்த 17 வயது பெண் ஷீலுவை கற்பழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. அதேநேரத்தில், எம்.எல்.ஏ., கொடுத்த புகாரின் பேரில், கடந்த மாதம் அந்தப் பெண் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார்.

                                         பாண்டா மாவட்டத்தில் அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியதும், அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

                                          இந்த மாதிரியான வழக்குகளுக்கு வெறும் சிறை தண்டனை என்பது வெறும் கண் துடைப்பு. இவர்களுக்கெல்லாம் முஸ்லீம் நாடுகளில் கொடுக்கப்படும் கடுமையான தண்டணைகள் போல் இங்கும் கொடுத்தால் தான் நமது நாடு இந்த மாதிரியான காமூகங்கள் கையிலிருந்து விடுபடும்.

No comments:

Post a Comment