Monday, October 4, 2010

மருத்துவ புரட்சி படைத்த ராபர்ட்டுக்கு நோபல் பரிசு

மருத்துவ உலகில் புரட்சி ஏற்படுத்திய பிரிட்டனை சேர்ந்த ராபர்ட் எட்வர்டுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் ( உடற் கூற் இயல் ) இவர் ஆற்றிய பணிக்காக பாராட்டி இந்த பரிசு அளிக்கப்படுகிறது.
                                     
                                         இன்று நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ராபர்ட் எட்வர்டு பிரிட்டனை சேர்ந்தவர். 85 வயது ஆகும் இவர் மருத்துவ துறைக்கு அரும்பணியாற்றி இருக்கிறார் என நோபல் பரிசு அறிவிக்கும் சுவீடன் தெரிவித்துள்ளது. மேலும் இவர் உலகில் வறட்டுத்தன்மைக்கு ( மலடு) இல்லாத நிலைக்கு இவரது கண்டுபிடிப்பு பெரிதும் உதவியிருக்கிறது என கூறப்பட்டுள்ளது.1978 ஆம் ஆண்டு தான் இவர் முதன் முதலில் டெஸ்ட்  டியுப் குழந்த்தையை உருவாக்கினார்.

                                                 டெஸ்ட் டியூப் பேபி மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில் உலகில் 10 க்கும் மேற்பட்ட சதவீத்தனர் இதனை நம்பித்தான் இருக்கின்றனர். என்றும் கூறப்பட்டுள்ளது.

                                     
ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு அறிவிக்கப்படும் போது எப்போதும் மருத்துவ துறைக்குத்தான் முதலில் அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களில் தொடர்ந்து அமைதி, இலக்கியம் என நோபல் பரிசு வழங்கப்படும். இந்த நோபல் பரிசு கடந்த 1901 ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ரவீந்தரநாத் தாகூர் , அன்னைதெரசா, சர்.சி.வி.,ராமன், இந்தியாவில் பிறந்து அமெரிக்கராக வாழும் வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முக்கியஸ்தர்கள்.

No comments:

Post a Comment