Thursday, September 2, 2010

தமிழ் செம்மொழி மாநாடு - முதல்வர் கருணாநிதி நிறைவு விழா பேருரை : முக்கிய அம்சங்கள்

 முதல்வர் கருணாநிதி நிறைவு விழா பேருரை : முக்கிய அம்சங்கள்
 ஜூன் 27,௨௦௧௦.



  கோவை : கோவை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இறுதி நாளான இன்று, முதல்வர்
கருணாநிதி, சிறந்த மென்பொருளை உருவாக்கியதற்காக தனியார் சாப்ட்வேர்
நிறுவனத்திற்கு கணியன் பூங்குன்றனார் விருது வழங்கி, செம்மொழி மாநாட்டு
பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் நிறைவு  விழா பேருரை நிகழ்த்தி
பேசினார்.

அவர் உரையின் முக்கிய அம்சங்கள் சில:


* உலகின் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள மொழி தமிழ் மொழி. ஆங்கில மொழியின்
எழுத்து வடிவம் கி.பி. 7ம் நூற்றாண்டைச் சார்ந்தது. ஜெர்மன் மொழியின் எழுத்து
வடிவம் கி.பி. 8ம் நூற்றாண்டைச் சார்ந்தது. பிரெஞ்சு மொழியின் எழுத்து வடிவம்
கி.பி. 9ம் நூற்றாண்டைச் சார்ந்தது. இத்தாலி மொழியின் எழுத்து வடிவம் கி.பி.
10ம் நூற்றாண்டைச் சார்ந்தது. ஆனால் தமிழ் கிறிஸ்து பிறப்புக்கு முன்பாக
எழுத்து வடிவம் பெற்றது. வாழும் மொழியாக, வரலாற்று மொழியாக திகழ்வதால்
அறிஞர்கள் கூடி விழா எடுக்கிறோம்.

* தமிழ் கலாச்சாரம் மிக போற்றுதலுக்குரியது. தமிழ் சான்றோர்கள், மன்னர்கள் ,
தமிழறிஞர்கள் டாக்டர் . கால்டுவெல், ஜி.யு., போப், வீரமாமுனிவர், சூரிய
நாராயணார் சாஸ்திரி, பரிதிமாற்கலைஞர், உ. வே., சாமிநாதஅய்யர், தாமோதரபிள்ளை,
மறைமலை அடிகளார், திருவிக, மகாகவி பாரதியார், பாரதிதாசன், பெரியார் , அண்ணா,
ஆகியோரை ஆகியோரை நினைவு கூர்வோம்.

* ரோமானிய நாணயங்கள் கிடைக்கப்பெற்ற பகுதி கொங்கு பகுதி. ரோமானியர்கள் கொங்கு
நாட்டு மக்களோடு வாணிபம் புரிந்தார்கள்.

* தமிழர்களின் கட்டடக்கலையை பறைசாற்றும் கல்லணை, தஞ்சை பெரிய கோயில் ஆகியவை
சிறப்பு மிக்கவை

* தமிழ் மொழியை செம்மொழியாக சங்க இலக்கியங்கள் படைத்த சங்ககாலப்புலவர்கள்,
சான்றோர்கள் நினைவு கூறத்தக்கவர்கள்.

* ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த 5 திணைகளை நினைவுபடுத்தும் வகையில் ஐவகை
நிலங்களில் மரபணு பூங்காக்கள் அமைக்கப்படும்

* இலங்கையில் முகாம்களில் இருந்து மீள் குடியேற்றம் *செய்யப்பட்ட *தமிழர்களின்
மொழி, இன உரிமைகளை நிலைநாட்டும் கையில், அவர்களுக்கு உரிமைகள் வழங்க இந்திய
அரசை, இம்மாநாட்டின் வாயிலாக வலியுறுத்துகிறேன்.

* தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழியாக்க மத்திய அரசை *கேட்டுக்கொள்கிறேன்*

* உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க  மத்திய அரசை
கேட்டுக்கொள்கிறேன்.

* இந்திய தேசிய கல்வெட்டு நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.

* தமிழ் படித்தவர்களுக்கு அரசுத்துறையில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

* பூம்புகார், குமரிக்கண்டத்தை அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும்.

* தமிழ் மென்பொருள் உருவாக்க ஒன்று பட்டு செயல்படுவோம்.

* தமிழக பள்ளி கல்லூரி, தமிழ்ச்செம்மொழி பாடங்கள் நடத்த ஆவண செய்யப்படும்.

* மதுரை மாவட்டத்தில் தொல்காப்பிய உலகத்தமிழ்ச்செம்மொழி சங்கம் அமைக்கப்படும்.

* குறிப்பிட்ட கால இடைவெளியில் தமிழ்ச்செம்மொழி மாநாடு நடத்த ஆவண செய்யப்படும்.

* திராவிட கலை பண்பாடுகளை காக்க நிரந்தர கண்காட்சி அமைக்கப்படும்.

* கோவை மாநாடு நெடுகாலம் நிலைத்திருக்க செம்மொழி மாநாட்டு பூங்கா

** கோவை காந்திபுரம் குறுக்குச்சாலை, சத்தியமங்கலம் சாலை மேம்பாலம் உள்ளிட்ட
மேம்பால பணிகள் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும்.*

* தமிழ் வளர்ச்சிக்கு தனியாக ரூ. 100 கோடி ஒதுக்கப்படும். இதற்கெல்லாம் மத்திய
அரசின் உதவி தேவை என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

--
தினமலர்



 மீ. குமார்

No comments:

Post a Comment